Posts

Showing posts from July, 2014

நீ இல்லாது

பேய்களும் உறங்கும் பின்னிரவிலும் விழித்திருக்கிறேன் நான் கண்ணீரின் உப்புக்கரை படிந்த அலைபேசித் திரையை துடைத்தபடி ... நீங்கா உன் நினைவுகள் நீட்டிக்கொண்டே போகின்றன என் இரவுகளை... ஒவ்வொரு பாடலிலும் உனக்காய் ஒரு வரி ஒவ்வொரு அறையிலும் எனக்கான உன் வாசனை ஒவ்வொரு நிமிடமும் உனக்கான ஒரு எண்ணம் விழியோடு விழி தொட விரலோடு விரல் தொட அருகிலாது பிரித்தபடி சிரிக்கிறது காலம் பிரியமாய் புன்னகைக்கும் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே காலத்தை கடக்கிறது நம் காதல்