Posts

Showing posts from 2012

அருகிருந்தும் தொலைவிலாய்.....!

நினைவுகளைத்தவிர  வேறு என்னவுண்டு  இவ்வாழ்வில் ? விரலிடுக்கில் பென்சில் வைத்து நசுக்கிய வரலாற்று  ஆசிரியருக்கு கம்மாடிட்டி ட்ரேடிங் சொல்லிக்கொடுத்த  நாள் நினைவிலுண்டு தேனீர் வாங்கிக் கொடுக்க தயங்கி  நின்ற நா.செழியன் என்  வீட்டு  வங்கிக்கடனுக்கு உத்தரவாதம்  கொடுத்த  பொழுது நினைவிலுண்டு அருணா பேருந்துக்காய்  காத்திருந்து வகுப்பரைகளைத்  தவிரவிட்ட வியாழன்களும்  வெள்ளிகளும் வாரம்முழுதும் நினைவிலுண்டு வாழும்  வாழ்க்கையென  ஒன்றும் வாழ  வேண்டிய  வாழ்க்கையென  ஒன்றும் வார்த்தை  தவறிய வாழ்க்கையென ஒன்றும் வாழ  நினைக்கும்  வாழ்க்கையென  ஒன்றுமாய் வாழ்க்கைகளும் நினைவிலுண்டு நினவுகளெல்லாம்  நீயே  என்றான  பின் நீ  அருகிருந்தால்தான்  நிம்மதி தொட்டு  விடும்  தூரத்தில்  நீ தொடர்பு  கொள்ளும்  ஆவலில்  நான். காலத்தின்  கணக்குகள்  வேறானாலும் காதலின்  கணக்குகள்  வேறல்ல...! கையருகில்   வா....! ...

ஒரு கோடைக்காலத்து வனவாசம்

வீடு வந்தவுடன் iPad  தேடும் மகன் இல்லை  பனிரெண்டு மணிவரை  விளையாட அழைக்கின்ற மகனும் இல்லை காலாற நடை நடந்து காய்கறி வாங்கவும்  முக்காலி ஏறி மின்விசிறி துடைக்கவும்  அதிகாலை பாக்கட் பால் வாங்கவும் அவசியமில்லை  மின்சார பில்லை  ஈ பைவ் ஆண்டியும்  காஸ் சிலிண்டரை  கிருஷ்ணா அம்மாவும்  பார்த்துக்கொள்வார்கள்  தினமும் ஒரு சினிமா, எட்டு வரை தூக்கம் , தஞ்சாவூர் மெஸ் சாப்பாடு , இரண்டு நாளுக்கொருமுறை பீர்,  கேள்வி கேட்க ஆளில்லா வாழ்வென  இனிமையாய் இருக்கலாம் கோடை  அறுநூறு சதுர அடி காலி வீட்டினில்  வழி பார்த்து ஏங்கி நிற்கும் புன்னகையும்  கழுத்தைக்கட்டியுருளும் குழந்தைகளும்  நேற்றுவரை நிறைந்திருந்த முத்தச்சுவையுமின்றி நினைவுகளின் வாசனையில்...