நாகவள்ளி

சந்திரமுகி  2  படத்தில்  நடிக்க  பி.வாசு  ரஜினிகாந்த்-ஐ  கேட்ட போது  ரஜினி  என்ன  சொன்னார்?  "என்னை விட,  அஜீத்  நடித்தால்  Super-ஆ  இருக்கும்.  வேட்டையன்  charector-க்கு  அஜீத்  தான்  சரியான  சாய்ஸ்". 


அஜீத்  மேல  அப்படி  என்ன  கோபம்  ரஜினி  உங்களுக்கு?  உங்க  ரசிகன்-ங்கறத   தவிர   அஜீத்  என்ன  தப்பு  பண்ணினார்?  தல.....  தப்பிச்சே   நீ...!

நந்தா...    சிக்கிட்டேடா   நீ.    சிக்கிட்டே...

சந்திரமுகி,   சந்திரமுகி  2   என்ன   வித்தியாசம்?  2  மொக்கை  படம்.  அதான்....

என்னோட  விமர்சங்கள்ள   நான்  கதை  என்ன,  screenplay  என்ன  இதெல்லாம்  எப்போவுமே  சொல்றதில்ல.  அது  தியேட்டர்  போய்,  திருட்டு  VCD  வாங்கி  பாக்கறவங்களோட  தலையெழுத்து.  என்ன  enjoy  பண்ணினேன்,  என்ன  miss  பண்ணினேன்னு  சொல்றதோட  என்  வேலை முடிஞ்சது.

சந்திரமுகி  2  பாக்கும்  போது,  முழு  படமும்  part-1,  மாதிரியே  இருக்கறது  பெரிய  குறை.  ஒவ்வொரு  சீன்லயும்  முதல்  படத்தை  corelate பண்ண  முயற்சி நடந்துகிட்டே  இருக்கு.பெரிய குடும்பம்,  30  அடி  பாம்பு,  பத்தி  எரியற  பிரச்சனைகள்,  எல்லாம்  தெரிஞ்ச  மந்திரவாதி,  அவரே  சொல்ற  மாதிரி  "இந்த  பிரச்சனைய  தீர்க்க  ஒரே  ஒருத்தராலதான்  முடியும்.  அவரு...."  நம்ம  ஹீரோ  வெங்கடேஷ்,  அழகா  பொண்ணுங்க,  ஜொள்ளு விடற  அங்கிள்,  பழைய  அவுட் ஹவுஸ்.....   முடியல..

Twist  குடுக்க  நல்லா  பண்றாங்கய்யா  முயற்சி.....  சிரிப்பு   தான்  வருது.

சிரிக்க  வைக்க  நல்லா பண்றாங்கய்யா  முயற்சி....  கொட்டாவி  தான்  வருது.

"நான் செத்தா  கூட  பரவாயில்லை.  உங்க  பொண்ண  காப்பத்தறேன்"-  ங்கற  அதே  கிளைமாக்ஸ்.  எப்படித்தான்  இந்த  கதைய,  ஸ்க்ரீன்ப்ளே வ   நம்பினாரோ  வெங்கடேஷ். I  don't  blame  vaasu.   அவரால  அவ்ளோ  தான்  முடியும்.  Actor  should  have  been  wise.

சன் டிவி  மாதிரி  சொன்னா...   நாகவள்ளி,    நோக  வைத்து.   
உங்கள்  மகிழ்ச்சிக்காக    ஒரு  நல்ல photo.

Comments

Popular posts from this blog

உழைப்பு

நீ இல்லாது

காதல்