அவள்

காலடித்தடங்களால் நிறைந்த என் வீடு
சமைத்த சுவைக்கு அடிமையான என் நா
மணத்தை தேடியலையும் என் நாசி

ஓசையெல்லாம் இசையாக
கோபமெல்லாம் குளிராக
காதலெல்லாம் கவிதையாக

திரும்பிய திசைகளில் என் பயணம்
இருக்கிற இடங்களில் என் இல்லம்
நினைக்கின்ற நினைவுகளில் என் நிம்மதி.

இப்படியாய்

எல்லா வாக்கியங்களுக்கு முன்னும் அவள் நிரம்பிய
என் வாழ்வு

Comments

Popular posts from this blog

உழைப்பு

நீ இல்லாது

காதல்